உயிருக்கு போராடும் மீனவர்களை மீட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்.

கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், “டெவன் 5” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு மீனவர்கள் இன்று (30) காலை சிங்கப்பூர்க் கொடியுடன் பயணித்த MV KOTA CAMIL’ வர்த்தகக் கப்பலினால் மீட்கப்பட்டனர்.

கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை அருந்திய நிலையில், சுகவீனமடைந்த டெவோன் 5 படகின் மீனவர்கள் இருவர் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அந்த படகில் இருந்த 6 மீனவர்களில் 4 பேர் திரவத்தை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூர்க் கொடியுடன் பயணித்த வர்த்தகக் கப்பலினால் மீட்கப்பட்ட ஏனைய இரண்டு மீனவர்களும், தற்போது டெவோன் 5 நெடுநாள் மீன்பிடி படகு இருக்கும் இடத்தை நோக்கி செல்லும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜயபாகு கப்பலில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.