நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற இருவேறு விபத்தில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

நானுஒயா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குறுக்கு வீதியின் காத்தாடி சந்தி எனும் பகுதியில் இடம்பெற்ற இரண்டு விபத்து சம்வத்தில் ஜந்து பேர் காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 02.10.2020.வெள்ளிகிழமை விடியற்காலை வேலையில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் 14நாட்கள் தனிமைபடுத்தி வைக்கப்பட்டிருந்த இரானுவீரர் ஒருவரை தனிமை படுத்தல் நிறைவு பெற்ற உடன் அவரை சொந்த இடத்திற்கு இரானுவ முகாமில் உள்ள பேருந்தில் ஏற்றி சென்ற வேலை குறித்த பேருந்து ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் வங்கி ஒன்றில் மோதுண்டு விபத்துக்குளாகியுள்ளானதில் ஒரு இரானுவ வீரரும்.

அக்கபத்தனை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்று முச்சக்கர வண்டியில் முன் பக்கம் பொருத்தபட்டிருந்த டயர் கலண்டு விழுந்தமையினால் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி மொத்தம் ஜந்து பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நானுஒயா போக்குவரத்து பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்கின்றமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.