தம்மிக்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் யாழிலிருந்து ஆரம்பம்..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேராவும் தனது பிரசார நடவடிக்கைகளை வடக்கிலிருந்து முடுக்கிவிட்டுள்ளார்.

அதற்கேற்ப வடக்குப் பகுதியிலும் தனது செயல்பாடுகளைச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்.

யாழ். முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்ற DP கல்விச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பெருமளவான கூடியிருந்த பிரதேச மக்கள் மத்தியில் உரையாற்றிய தம்மிக்க பெரேரா, DP கல்வித் திட்டத்தின் மூலம் நாட்டின் ஒரு மில்லியன் பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் எனவும், ஐந்து வருடங்களில் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு குழந்தைக்கான இந்த பாடநெறி 25 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளது என்றும், நாட்டில் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான மொத்தச் செலவு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், ஆனால் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாண மக்கள் கொழும்புக்கு செல்ல வேண்டிய அனைத்து அரசாங்க வேலைகளையும் யாழ்ப்பாணத்தில் இருந்தே செய்யக்கூடிய வகையில் அரச அலுவலகங்களை நிறுவி யாழ்ப்பாண மக்களின் வாழ்வு வசதிக்காக தன்னை அர்ப்பணிப்பேன் என்றார்.

மேலும், தான் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் வடக்கு புகையிரதப் பணியை மூன்று வருடங்களுக்குள் நிறைவு செய்ததையும், 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இந்த நாட்டிலும் ஆயிரம் மகிந்தோதய ஆய்வு கூடங்களை நிறுவுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

Leave A Reply

Your email address will not be published.