பிணையில்லாமல் கடன் வழங்கும் அரச வங்கியை எமது அரசு ஆரம்பிக்கும் – அனுர

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இளைஞர்கள் மத்தியில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிணையில்லாமல் ஆரம்ப மூலதனத்தை வழங்குவதற்காக தனது அரசாங்கத்தின் கீழ் புதிய அபிவிருத்தி வங்கி ஒன்று உருவாக்கப்படும் என NPP தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

இதன் மூலம் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கெக்கிராவ நகரில் நடைபெற்ற NPP கட்சியின் மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.