யாழில் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெருந்தலைவர் சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலிப்பு.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை எடுத்து வரப்பட்ட சம்பந்தனின் புகழுடல் அங்கிருந்து கார் மூலம் யாழ். மார்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன்போது சம்பந்தனின் புகழுடலுக்குத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்குக்குக் கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று மாலை 4 மணி வரை அஞ்சலி செலுத்த முடியும் என்று தமிழரசுக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.