ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கான திகதி இதோ!

தொழிலதிபர் சி.டி. லெனாவ சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில் தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பிலானது.

குறித்த மனு எதிர்வரும் 08ஆம் திகதி பெஞ்ச் முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.