ஜனாதிபதியானதும் பாலஸ்தீனத்துடன் இணைவேன்..தாக்குதல்களை நிறுத்துவேன்..- இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த சஜித்.

பாலஸ்தீன மக்கள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கேட்டுக்கொள்வதாக SJB தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் இலங்கை மக்கள் இரட்டைப் பேச்சின்றி பாலஸ்தீனத்திற்காக நிற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற சக்வல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாங்கள் கண்டிப்பாக பாலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்போம். இஸ்ரேல் அரச பயங்கரவாதம் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற தாக்குதல்களை கண்டிக்கிறோம். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிடம் கூற விரும்புகின்றோம். இந்த வருட இறுதிக்குள் இலங்கை பாலஸ்தீன மக்களுடன் ஒன்றாக நிற்கும் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.