ஜனாதிபதி வேட்புமனு கிடைக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்..- தம்மிக்க

அனைவருடனும் இணைந்து செயற்படக் கூடிய ஒரு தலைவர் இருந்தால் தான் ஒருவரே என நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவிக்கின்றார்.

அதற்கான தேவை ஏற்பட்டால் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாவிட்டால் மீண்டும் அரசியலுக்கு வரும் நம்பிக்கை தனக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விழா ஒன்றின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.