மொட்டு ஆதரவாளர்களது ஆரவாரங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி மொட்டு மேடைக்கு ஏறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேடையில் ஏறியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபயகுணவர்தனவின் 27 வருட அரசியல் வாழ்க்கையை முன்னிட்டு இந்த நிகழ்வு களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னரே ஜனாதிபதி இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்.

மே 9, 2022 இல் ஏற்பட்ட நெருக்கடியின் போது அவர் நாட்டைக் பொறுப்பேற்கான காரணத்தையும் அதை பாதித்த சூழலையும் அவர் விளக்கினார்.

அங்கு கலந்து கொண்ட மொட்டு உறுப்பினர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு அமோகமான கரகோசம் கிடைத்தமை விசேட அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.