பள்ளி மாணவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவு.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளபடி, முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் பிரதான புலமைப்பரிசில்கள் இம்மாதம் 12ஆம் திகதி முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புலமைப்பரிசில் முறையின் கீழ் மாதாந்தம் 6,000 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கு ஒவ்வொரு கல்வி வலயத்திலிருந்தும் 60 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், 6,000 மாணவர்களுக்கு இந்த கொடுப்பனவு கொடுக்கப்படவுள்ளது.

அத்துடன் முதலாம் தரம் முதல் பதினொன்றாம் தரம் வரையிலான மாணவர்களுக்கு 12 மாத காலத்திற்கு மாதாந்தம் 3,000 ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த புலமைப்பரிசில் முக்கியமாக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மற்றும் அனைத்து பிராந்திய கல்வி அலுவலகங்கள் மற்றும் அதிபர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகிறது.

Leave A Reply

Your email address will not be published.