சஜித் அணியில் இருந்து இரு எம்.பிக்கள் விரைவில் வெளியேறுகின்றனர்! – ஹர்சன ராஜகருண எம்.பி. தகவல்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளனர் என்று தெரிவித்துள்ள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண, அவர்கள் டொலர்களில் வெகுமதிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மற்றும் களுத்துறையைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விரைவில் வெளியேறவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் விபசாரம் செய்யும் இவர்கள் டொலர்கள் மூலம் கிடைத்த வெகுமதிகளுக்கு விலைபோயுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

“நாங்கள் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களையே இழக்கப்போகின்றோம். ஆனால், தங்கள் பதவிகளைத் துறந்துவிட்டு எதிர்க்கட்சியில் இணைவதற்குப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர்.” – என்றும் ஹர்சன ராஜகருண எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.