திரிஷா நடித்த முதல் இணையத் தொடர் …..

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘பிருந்தா’ இணையத்தொடர் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது.

திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள முதல் இணையத்தொடர் என்பதால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.

இதில் திரிஷா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும் ஜெயபிரகாஷ், ஆம்னி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் இத்தொடரில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

தனது நடிப்பில் உருவான முதல் இணையத் தொடர் என்பதால் அதற்கு எவ்வாறான வரவேற்பு அளிக்கப்படுகிறது என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறார் திரிஷா.

Leave A Reply

Your email address will not be published.