மனைவி பிள்ளைகளோடு வீட்டுக்குத் தீ வைத்த தந்தை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சொந்தப் பிள்ளைகளைக் கொலை செய்ததாக 28 வயது ஆடவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

3 பிள்ளைகளைக் கொலை செய்ததாகவும் இதர குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்ய முயன்றதாகவும் ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (7 ஜூலை) தமது குடும்பம் இருந்த வீட்டுக்கு ஆடவர் தீ வைத்ததாக நம்பப்படுகிறது.

அதில் 5 மாதக் குழந்தையோடு 2 வயதிலும் 6 வயதிலும் உள்ள சிறுவர்கள் மாண்டனர்.

ஆடவரின் மனைவி உள்பட 3 சிறுவர்களும், 9 வயதுச் சிறுமியும் தீச் சம்பவத்திலிருந்து தப்பினர்.

தீ எரிந்துகொண்டிருந்த வீட்டுக்குள் அதிகாரிகள் செல்ல முடியாமல் ஆடவர் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

வீட்டிலிருந்து தப்பிய அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.