துபாயிலிருந்து இரு பாதாள உலக தாதாக்களை தூக்கி வந்தது போலீஸ்.

டுபாய்க்கு தப்பிச் சென்ற இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஹுவல பிரதேசத்தை சேர்ந்த சமந்த டி சில்வா அல்லது பொபி மற்றும் மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த திமுத்து சதுரங்க அல்லது சத்து ஆகியோரை கைது செய்து அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவர் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்களைக் கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.