கதிர்காமம் பெரஹரா கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிறுமியொருவரை வன்புணர்வு செய்யச் சென்று கைது…

பன்னிப்பிட்டியிலிருந்து கதிர்காமத்திற்கு தனது பெற்றோருடன் புனித யாத்திரை சென்ற 19 வயது யுவதியை குற்றவியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கதிர்காம ஊர்வலத்தில் விஷேட கடமைக்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நேற்று முன்தினம் (11) இரவு கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 43 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுதெனிய, கல்படுன, பலட்டுவ, மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 19 வயது யுவதி தனது பெற்றோர் மற்றும் மக்கள் குழுவுடன் கதிர்காமம் வந்து வழிபாடு செய்து கதிர்காமம் மகா ஆலய மைதானத்தில் தங்கியிருந்த போது , சிவில் உடையில் இருந்த கான்ஸ்டபிள் பல சந்தர்ப்பங்களில் சிறுமியின் பின்பகுதியை பிடித்து இறுக்கியுள்ளார். இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்த சிறுமி, சிவில் உடையில் வந்த நபரை அருகில் இருந்தவர்களுடன் சேர்ந்து பிடித்து, கோவில் வளாகத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.