ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மற்றைய மனு மீதான விசாரணை திங்கட்கிழமை!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்படாததால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கும் வரை அரசியலமைப்பை மீறுவதாக கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க மூவரடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவடுன இந்த மனுவை அண்மையில் சமர்பித்து, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அது சர்வஜன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி கிடைக்கும் வரை, அரசியலமைப்பு மீறல் என அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடைவிதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட வேண்டும் என அதில் கோரப்பட்டது.

இதன்படி, குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை (15) ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.