தெரண சதுரவுக்கு எதிராக அமைச்சர் சுசில் முறைப்பாடு..

தெரண தொலைக்காட்சியின் பிரதம ஊடகவியலாளர் சதுர அல்விஸ் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பினார்.

தெரண அலைவரிசையில் காலை ஒளிபரப்பான தெரண அருண நிகழ்ச்சியில் தம்மை இலக்கு வைத்து சதுர அல்விஸ் பொய்யான தகவல்களை முன்வைத்ததாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் போது பணம் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான விடயத்தில் தான் ஒருபோதும் தலையிடவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாக சதுர அல்விஸை பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகள் குழுவிற்கு விசாரணைக்கு அழைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.