குளியலறை கேமரா மூலம் மச்சினிச்சியினதும், பெண் மருத்துவர் ஒருவரதும் நிர்வாண காட்சிகளை ரசித்த யாழ்.மருத்துவர் மனைவியிடம் மாட்டினார்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் , கமரா அமைப்பை பொருத்தி தனது மனைவியின் சகோதரி மற்றும் மற்றுமோர் இளம் வைத்தியரின் நிர்வாண காட்சிகளை ரகசியமாக பார்த்து ரசித்து அனுபவித்த வைத்தியரை தாக்கிய மனைவி , கணவனை வீட்டை விட்டு நேற்று (14) துரத்தியடித்துள்ளார்.

அன்றைய தினமே குறித்த பெண், யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணி ஒருவரை சந்தித்து குறித்த வைத்தியரை விவாகரத்து செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் குறிப்பிட்ட வைத்தியர் , யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததுடன் , அங்கு அவரது மனைவியின் தாயும் , சகோதரியும் மற்றுமொரு இளம் வைத்தியரும் சேர்ந்து வசித்து வந்துள்ளனர்.

நீண்ட காலமாக, தனது கணவரிடம் ஒரு பெரிய மாற்றத்தை அவதானித்த மனைவி, கணவனது மாற்றத்துக்கான காரணத்தை கண்டறிய , கணவனுக்கு தெரியாமல் அவரைக் கண்காணித்து வந்துள்ளார்.

ஒரு நாள், குளியலறையில் உள்ள பிளம்பிங் சிஸ்டத்தில் பிரச்சனை ஏற்பட , அந்த கோளாறை சரி செய்ய, மனைவி பிளம்பர் ஒருவரை அழைத்து வந்துள்ளார்.

குளியலறையில் இரண்டு தண்ணீர் குழாய்கள் உடைந்திருந்ததால், அந்த குழாயை திருத்த பிளம்பர் முனைந்த போது , குழாய்களுக்குள் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கேமராக்களை கவனித்த பிளம்பர், அதை , அந்த வீட்டுப் பெண்ணிடம் காட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் கேட்டபோது, ​​தனக்கு எதுவும் தெரியாது என சொல்லி மழுப்பிய போதும், கணவரது மொபைல் போனை பலவந்தமாக பறித்து மனைவி சோதித்தபோது, அதில் ​​அவரது சகோதரி மற்றும் இளம் மருத்துவரின் பல நிர்வாண காட்சிகள் குளியலறை கேமராவின் மூலம் பெறப்பட்டு , மொபைல் போனில் பதிவாகியிருப்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார்.

ஊடனடியாக மனைவி மருத்துவரை அடித்து வீட்டை விட்டு துரத்தியதோடு, மருத்துவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மனைவி எடுத்துள்ளார்.

வீட்டிலிருந்து துரத்தப்பட்ட மருத்துவர் சென்று, அவரது நண்பர் ஒருவரின் அறையில் தங்கி இருப்பதை அறிந்ததும் , அங்கும் சென்ற மனைவி , தனது கணவனான மருத்துவர் செய்த மோசமான செயலைக் கூறி அவரை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

தற்போது குறித்த வைத்தியர் , சில நாட்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து தப்பி தலைமறைவாகிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.