யாழ். ஊர்க்காவத்துறை கோவிலுக்கு சென்ற திருநங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 03 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் ஊர்க்காவத்துறை முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த திருநங்கை ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை ஊர்க்காவத்துறை பொலிஸார் இன்று (14) கைது செய்துள்ளனர்.

கொழும்பில் இருந்து சென்றுள்ள இந்த பெண் யாழ்ப்பாணம் ஊர்க்காவத்துறை பகுதியில் உள்ள தனது தோழியை சந்திக்க வந்துள்ளதுடன், தோழி கோவிலுக்கு சென்றிருந்ததாக அறிந்து , கொழும்பில் இருந்து வந்த பெண்ணும் தோழியை தேடி கோவிலுக்கு சென்றுள்ளார்.

கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தோழியை சந்திக்க முடியாமல் போனதாலும், தோழியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாலும், இரவு முழுதும் கோயிலில் இருந்து விட்டு , அதிகாலையில் தோழியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பெண் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஊர்க்காவத்துறை பொலிஸார் அவர்களை ஊர்க்காவல்துறை நீதவானின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நீதவானிடம் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.