பேருந்திலிருந்த பெண்ணின் முடியை வெட்டிய முஸ்லிம் மௌலவி கைது! (வீடியோ)

கண்டி – வத்தேகம பயணிகள் பேருந்தில் பெண் ஒருவரின் சுமார் ஒரு அடி வரையிலான முடியை வெட்டிய மௌலவி என கருதப்படும் முஸ்லிம் மௌலவி கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய மௌலவி தலைமுடியை வெட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் தனது தலைமுடியின் பாகத்துடன் கண்டி பொலிஸாரிடம் நேற்று (13) முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த மௌலவி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெரிவிக்கப்பட்ட சம்பவம் பின்வருமாறு.

நேற்று (13) கண்டி – வத்தேகம பயணிகள் பேருந்தில் பயணித்த 27 வயதுடைய பெண் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். கட்டுகஸ்தோட்டை வட்டரந்தன்ன சந்திக்கு அருகில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த மௌலவி கத்திரிக்கோலால் பெண்ணின் தலைமுடியை வெட்டுவதை உணர்ந்துள்ளாள்.

சம்பவத்தை உணர்ந்த பெண் உடனடியாக அலறி துடித்து, பேருந்தில் இருந்த மற்ற பயணிகளுக்கு சொல்லி சத்தமிட்டு உதவி கோரியுள்ளார். அப்போது, ​​கண்டக்டர் மற்றும் பல பயணிகள் வந்து சந்தேகமடைந்த நபரை பிடித்துள்ளனர்.

பின்னர் சாரதியும் , நடத்துனரும் பேருந்தின் பின் கதவைப் பூட்டி, முன் கதவுக்கு அருகில் பலரைத் தடுத்து நிறுத்தி பயணிகளை பேருந்து நிறுத்தங்களில் இறக்கிவிட்டு பேருந்தை கண்டி பொலிசுக்கு ஓட்டிச் சென்று ,மௌலவியை போலீசில் ஒப்படைத்துள்ளனர் .

சுமார் ஒரு அடி நீளத்திற்கு வெட்டப்பட்ட தலைமுடியுடன் பெண் , கண்டி பெண்கள் பொலிஸ் மற்றும் சிறுவர் பணியகத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய மௌலவி முருதலாவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.