வெளிநாட்டு பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

மாத்தறை வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற கொரிய பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட போது, ​​கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு வரும்போதே , அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 37 வயதுடைய தென்கொரிய பெண் ஆவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.