மதுஷுடன் வியாபாரம் செய்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் கஞ்சிபானியிடமிருந்து தப்பிக்க பாதாள உலகத்தின் உதவியை நாடும் நிலை.

மாகந்துறை மதுஷிடம் பண பரிமாற்றங்களை செய்து மதுஷின் மரணத்தின் பின்னர் , அவரது பணத்தை மறைத்து வைத்துக் கொண்டுள்ள, பல அரசியல்வாதிகளும், மதுஷுடன் டீல் செய்த பலரும், கஞ்சிபானி இம்ரானிடமருந்து தப்பிக்க பல்வேறு பாதாள உலகக் குழுக்களின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல கோடி ரூபாவை முதலீடு செய்த மாகந்துர மதுஷின் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த காரணத்தால், கிளப் வசந்த அத்துரிகிரியில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இந்த கோரிக்கைகள் பலர் முன்வைக்கப்பட்டுள்ளதாக டுபாயில் இருந்து கிடைத்த தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள பாதாள உலகக் கும்பல் தலைவர்கள், மதுஷின் மரணத்திற்குப் பின்னர், அவரது பணத்தை மோசடி செய்த பலர் , கிளப் வசந்தவின் கொலைக்குப் பின்னர் பயந்து கஞ்சிபானியிடம் சமாதானம் பேசி , பண விவகார பிரச்சனைகளை தீர்த்து தருமாறு கோரியுள்ளதாக டுபாயில் உள்ள பிரதிநிதிகளுக்குத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாகந்துறை மதுஷின் மரணத்திற்குப் பிறகு, அவரது வர்த்தக வலையமைப்பைக் கைப்பற்றி, மதுஷின் விசுவாசிகளைக் கூட கொன்று குவித்த ஹரக் கட்டா தரப்பும், அதுருகிரிய சம்பவத்தின் பின்னர் அச்சமடைந்துள்ளதுடன், ரொடும்ப அமில, லொக்கு பெட்டி, பொடிபெட்டி போன்ற குழுக்களும் , கஞ்சிபானி இம்ரானின் உதவியுடன் மதுஷின் வலையமைப்பிலிருந்து பணம் வசூல் செய்யத் தொடங்கியுள்ளதோடு , மதுஷின் கொலைக்கு பழிவாங்கவும் ஆரம்பித்துள்ள நிலையில் எதிரணியினர் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.