விரக்தியில் ஒதுங்கியுள்ள எம்.பி.க்களை சமாதானப்படுத்தும் சஜிதின் புதிய ஆட்டம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, SJB குறித்து ஏமாற்றமடைந்துள்ள எம்.பி.க்களுடன் பேசி அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சியின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி விவகாரங்களில் இருந்து விலகியுள்ள ராஜித சேனாரத்ன மற்றும் தலதா அத்துகோரல ஆகியோருடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலத்தை மறந்துவிட்டு மீண்டும் கட்சியின் செயற்பாடுகளில் இணையுமாறு சஜித் பிரேமதாச அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு , அவர்கள் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.