பெண் அதிகாரி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் : பீரிஸ் குழுமத்தின் தலைவரைக் கைது செய்ய உத்தரவு

இலங்கையின் முன்னணி நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேன யத்தேஹிகேவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் பெண் அதிகாரி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இது நடந்தது.

இது தொடர்பில் குறித்த பெண் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு, அதன் பிரகாரம் கோட்டை நீதவானிடம் அவருக்கு பயணத்தடையை பொலிஸார் பெற்றிருந்தனர்.

எவ்வாறாயினும், அதற்கு முன்னதாகவே ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேன யத்தேஹிகே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால், அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.