விசா இன்றி தாய்லாந்திற்குள் நுழைய இலங்கையர்களுக்கு இன்று முதல் அனுமதி!

இன்று முதல் இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வீசா இன்றி தாய்லாந்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புதிய கொள்கையின் கீழ், சுற்றுலாப் பயணி ஒருவர் 60 நாட்களுக்கு விசா இன்றி நாட்டில் தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்பி வருவற்கான ஆதாரம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதலும் கட்டாயமாகும்.

தாய்லாந்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.