மொட்டில் பெரும்பான்மையை மீட்ட ரணில்.. மிஞ்சிய செயலாளரும் இரண்டு மூன்று பேரும் நெலும் மாவத்தையில்..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சியின் எஞ்சிய பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காது போனால் தனிப்பட்ட மட்டத்தில் அந்த தீர்மானத்தை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தனி வேட்பாளரை கட்சி முன்வைக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட மிகச் சிலரே கருத்து தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி உறுப்பினர்களின் பிரதிநிதிகளுடனான தற்போதைய கலந்துரையாடலில், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க வேண்டும் என்று கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹிரு அலைவரிசையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.