யாழ். போதனாவில் சுகாதார அமைச்சர் குழு.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஐயம் செய்தனர்.

இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் சுகாதார அமைச்சரால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை விடுதிகள், சத்திர சிகிச்சைப் பிரிவுகளையும் யாழ். போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்

அத்தோடு குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் வழங்கி வைத்ததுடன் ஞாபகார்த்தமாக மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.

அமைச்சரின் இந்த விஐயத்தின்போது சுகாதார அமைச்சின் செயலாளர் மஹிபால மற்றும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் அதிகாரிகள், பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.