மின்சாரம் தாக்கி வயோதிபர் பலி!

பதுளை, வினீதகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

78 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் தனது தோட்டத்தில் விளையும் பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.