சஜித் நாட்டைப் பொறுப்பேற்க முயலும் போது, ​​ரணில் ஓடிப்போய் பிரதமர் பதவியைப் எடுத்துக் கொண்டார் : ஹர்ஷ டி சில்வா.

நாடு நெருக்கடிக்கு உள்ளான போது சஜித் பிரேமதாச பொறுப்பேற்காமல் ஓடிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி தானும் இரான் விக்ரமரத்ன, கபீர் ரசீம் மற்றும் ரஞ்சித் மத்தும் பண்டார ஆகியோர் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அதிகார பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

தேவைப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின் கதவு வழியாக வந்து பிரதமர் பதவியை கைப்பற்றியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சமகி ஜன பலவேக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.