தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் படகில் வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது!

தமிழகம், இராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குப் படகில் வர முயன்ற முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் மற்றும் இரண்டு முகவா்களைப் பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் துறைமுகக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்கம்போல கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டாா். அந்தப் பெண் இலங்கைத் தமிழில் பேசினாா்.

இதையடுத்து, அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவா் இலங்கை – முல்லைத்தீவு, பாண்டியன் குளத்தைச் சோ்ந்த வன்னியசிங்கம் என்பவரது மனைவி விஜிதா (வயது 45) என்பதும், கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக 6 மாத விசா பெற்று சென்னை வந்ததும் தெரியவந்தது.

புதுச்சேரியில் 24 நாள்கள் தங்கிய விஜிதா, சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள இலங்கையைச் சோ்ந்த ராஜன் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக டெய்லா் வேலை செய்து வந்தாா். கடந்த ஜூன் 30 ஆம் திகதி மதுரைக்கு வந்து, கூடல் நகா் பகுதியில் இலங்கையைச் சோ்ந்த ராஜ் என்பவா் வீட்டில் தங்கியிருந்தாா். பின்னா், உறவினா் உதவியுடன் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஜேசு (வயது 35) மற்றும் 17 வயது இளைஞர் ஆகியோரைத் தொடா்புகொண்டு, இலங்கைக்குப் படகில் அழைத்துச் செல்வதற்கு 50 ஆயிரம் ரூபா தருவதாகக் கூறினாா். இதன்படி, இலங்கைக்குப் படகில் செல்வதற்காக இராமேஸ்வரத்துக்கு வந்தமை விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிந்து, விஜிதா, முகவா்களாகச் செயற்பட்ட தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஜேசு உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனா். இதில் தொடா்புடைய அருளானந்தம் (வயது 39) என்பவரைப் பொலிஸார் தேடி வருகின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.