அம்புலன்ஸ் மோதி இளைஞர் மரணம்!

மோட்டார் சைக்கிள் ஒன்றும் அம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி – கொழும்பு வீதியில் தருண சேவா மாவத்தை சந்தியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காலியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பலப்பிட்டிய வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வாகனம், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.