இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரதுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

54 வயதுடைய நபரே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.