வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து வேலைத்திட்டம்.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறித்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை. அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும்.

இவ்வாறு பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றமையால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பது தொடர்பாக 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் குறித்த கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.