யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் திருகோணமலையில் கோர விபத்து! – 51 பேர் காயங்களுடன் மூதூர் வைத்தியசாலையில் ….

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற தனியார் பஸ், திருகோணமலையின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை பாலத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்துள்ளனர்.

(19) மாலை 5 மணியளவில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது

விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.