‘மாடு கட்ட நல்லதொரு தூண் …. ஓட்டுகளை உடைக்கும் ஒரு மெசின்:…’ என சுனில் ஹந்துநெத்தியை நோக்கி தாக்குதல்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அக்கட்சிக்கு பகிரங்கமாக ஆதரவளிக்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

தனது அரசாங்கத்தின் கீழ் மூலங்களை வெளியிட முடியாத பணத்தை முதலீடு செய்ய பொது நிதியத்தை நிறுவவுள்ளதாக அவர் கூறியதற்கு எதிராகவே இந்த ஆட்சேபனை எழுந்துள்ளது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் இதேபோன்ற ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.

உலகத் தரம் வாய்ந்த பணக்காரரான எலோன் மஸ்க் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை, சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் தொடர்பான பதில் போன்றவையும் அவற்றில் முக்கியமானவை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியமைச்சில் சுனில் ஹந்துன்நெத்தி முக்கியப் பொறுப்பை வகிக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் லண்டன் விஜயத்தின் போது இலங்கையில் இருந்து பலகாரங்களைக் கொண்டு சென்று கொடுத்த லண்டன் வாழ் இலங்கையர் ஒருவர் ஹதுன்நெத்திக்கு தனது சமூக வலைத்தள கணக்கில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.