ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடியின் மனைவி பரபரப்பு புகார்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி நாகேந்திரனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, அவரது மனைவி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நாகேந்திரனின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

அதில், தனது கணவர் 24 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக பொய் தகவல்கள் பரவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரவுடி திருவேங்கடத்தைப் போன்று, தனது கணவரையும் என்கவுன்டர் செய்ய காவல் துறை முடிவு செய்திருப்பதாகவும் விசாலாட்சி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரை மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை அழைத்து வரும் போது, என்கவுன்டர் செய்ய காவல் துறை திட்டமிட்டு இருப்பதாக விசாலாட்சி குற்றம்சாட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.