தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து கிழக்கு ஆளுநர் – சிறீதரன் எம்.பி. சந்திப்பு.

தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநரின் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.