ஹிருணிகாவுக்கு பிணை!

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு தலா 50,000 மற்றும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பிணை வழங்கிய நீதவான், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞரை கடத்திச் சென்று அநியாயமாக சிறையில் அடைத்தமை மற்றும் தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.