அரசாங்கத்தை விட்டு வெளியேறுகிறோம்..- ஜனாதிபதிக்கு அறிவித்த மொட்டுக் கட்சி.

SJBயிலிருந்து அரசாங்கத்திற்கு சிலரைக் கொண்டு வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை கூடிய விரைவில் அரசாங்கத்திற்கு கொண்டு வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வரை, SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு , அவருக்கு விசுவாசமான கட்சிகள் அறிவித்திருந்தன.

இதன்படி, SJBபாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு தமது கட்சி தடையாக இருந்தால், அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு SJB உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.