யாழ். பாமசியில் 2 நாட்கள் வைத்திருந்த சடலம்.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மருந்தகத்தில், இரண்டு நாட்களாக வைக்கப்பட்டிருந்த சடலத்தின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் யாழ்.பொது சுகாதார பரிசோதகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

குறித்த வீட்டில் மருந்தகம் பதிவு செய்யப்பட்டு, வீட்டில் வயோதிப தம்பதியொன்று வசித்து வந்ததாகவும், நேற்று (22ஆம் திகதி) அந்த வீட்டு மருந்தகத்தில் வயோதிபரின் மரண இறுதிச் சடங்கு நடந்ததாக யாழ்.பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

மருந்தகத்தில் மருந்துகளை சேமிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மீறி , சில மருந்துகளை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் அங்கே சடலத்தை வைத்திருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுவரை, சுகாதார அதிகாரிகள் அந்த மருந்தக உரிமையாளர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதுடன், மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்தும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.