மருத்துவர் அர்ச்சுனா பேராதனை மருத்துவமனைக்கு …

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந்து பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் மருத்துவர்களதும் , வைத்தியசாலையினதும் , குறைபாடுகள் , நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக இருந்த பல்வேறு மோசடிகளை  வெளிக் கொண்டு வந்தவர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா .

அவருக்கு எதிரான வழக்கு ஒன்று உள்ள நிலையில் , கொழும்பு சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்த அவரை பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக, சுகாதார அமைச்சு தற்காலீகமாக நியமித்துள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக  கடந்த 07ம் திகதி  இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியாக 08ம் திகதிவரை  நடைபெற்ற நிலையில் வைத்திய அத்தியட்சகர் அங்கிருந்து வெளியேறினார்.

Leave A Reply

Your email address will not be published.