உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ் : தகுதி அடிப்படையில் அரசாங்க வேலை.

பங்களாதேஷில் தகுதி அடிப்படையில் அரசாங்க வேலைக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அந்நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பொதுத்துறையில் வேலைக்குச் சேர குறிப்பிட்ட பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறை பங்களாதேஷில் இருந்தது. அதை நீக்க வலியுறுத்தி அங்கு சில வாரங்களாகப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில் அது வன்முறையாக மாறியது. 170க்கும் அதிகமானோர் மாண்டனர். 2,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தகுதி அடிப்படையில் அரசாங்க வேலைக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் வலியுறுத்தினர்.

அதை அரசாங்கம் அதிகாரபூர்வமாய் ஏற்றுக்கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.