சுயேட்சை வேட்பாளராக, பணத்தை வைப்பிலிட்ட ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உறுதியளிக்கப்பட்ட பாதுகாப்புப் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனல் பெரேரா பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஆகஸ்ட் 15ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, செப்டெம்பர் 21ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Leave A Reply

Your email address will not be published.