கிராண்ட்பாஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த பெண்ணும் உயிரிழப்பு!

கொழும்பு, கிராண்ட்பாஸ், வடுல்லவத்தை பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (26) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 31 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

வடுல்லாவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் ரிவோல்வர் ஒன்றினால் சுட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.