சிவில் உடையில் காவல்துறையை வழிநடத்தும் தேஷ்பந்து…? : சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள தேஸ்பந்து தென்னகோன், பாதுகாப்பு அமைச்சிலிருந்து பொலிஸாரை, சிவில் உடையில் வழிநடத்திச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்த செயற்பாடு வெட்கமற்ற மற்றும் சட்டவிரோதமான செயலாகும்.

எவ்வாறாயினும், இதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒருபோதும் சீருடையுடன் அல்லது சிவில் உடையில் பாதுகாப்பு அமைச்சுக்கு வரமாட்டார்.

தவறான அறிக்கைகளை வெளியிட்டு நாட்டை தவறாக வழிநடத்துவதையும் அவர் கண்டித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.