ஜனாதிபதியின் காலி மேடையில் இஷாக் ரஹ்மான் – அதாவுல்லா மற்றும் அஸாத்சாலி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அநுராதபுரம் மாவட்ட SJB நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத்சாலி ஆகியோர் தற்போது காலியில் நடைபெற்று வரும் “எக்வ ஜயகமு ” பொதுக்கூட்டத்தின் மேடையில் கலந்துகொண்டுள்ளனர். .

இஷாக் ரஹ்மான் கடந்த பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கலாவெவ தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “எக்வா ஜயகமு” பேரணியில் இணைந்து கொண்டதுடன், பேரணியை கீழே உள்ள யூடியூப் பக்கத்தின் ஊடாக நேரடியாக பார்வையிடலாம்.

 

Leave A Reply

Your email address will not be published.