ரணிலை ஆதரிக்க முழுமையாக தயார் – மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்கும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியல் குழு கூடி இந்த முடிவை எடுக்கும் என்றார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்தால், முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறு வேட்பாளரை நியமிக்க கட்சி முடிவு செய்தால் அதற்கும் ஆதரவு அளிக்கும் என்றார்.

கட்சியின் பல எம்.பி.க்கள் தங்களது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அந்தக் குழுவிற்கு தேவையான சுதந்திரம் வழங்கப்பட்ட பிறகு பிரச்சனை இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.