‘மொட்டு’ சார்பில் களமிறங்கிப் போட்டியிட எந்நேரமும் தயார்! – தம்மிக்க எம்.பி. அதிரடி அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் எந்நேரமும் தயாராக இருக்கின்றார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நான் மஹிந்த சிந்தனையால் ஈர்க்கப்பட்டவன். எனது பொருளாதார செயற்பாடுகள் அனைத்தும் மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை.

மொட்டுக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் போட்டியிடுவதற்கு நான் தயாரில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.