‘இதயம்’ சின்னத்தில் போட்டியிடவுள்ள ரணில்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்தச் சின்னத்தில் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்பது தொடர்பில் தற்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் ‘இதயம்’ சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக ஜனாதிபதி ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில்எந்தவொரு நபரும் அல்லது எந்தவொரு கட்சியும் தமக்கு ஆதரவளிப்பதற்கு ஏற்றவிதத்தில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதியின் தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் ரொனால்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.