செவிலியர் மாநாட்டில் விதிகளை மீறிய அனுரவுக்கு சிக்கல்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க தலைமையில் மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற தாதியர் மாநாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியுள்ளது.
மாநாட்டில் கடமைச் சீருடையில் கலந்து கொண்ட அரச தாதியர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாதியர்களுக்கு கடமை விடுப்பு வழங்குவதற்கும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியிருந்தார்.
இதேவேளை, தாதியர்கள் சீருடையுடன் மாநாட்டில் பங்குபற்றியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால மேலும் குறிப்பிடுகின்றார்.
கடந்த மே மாதம் சம்பந்தப்பட்ட செவிலியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், வருடாந்திர யூனியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.